ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-08-23 17:17 GMT

கோபி கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுகாலனி கோவில் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி பழுதடைந்து உள்ளது. தூணின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் குடிநீர் தொட்டி வலுவிழந்து உடைந்து விழ வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பேராபத்து ஏற்படலாம். அதற்கு முன்பு குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்