புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நீண்ட காலமாக இடிந்து விழுந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.