சென்னை அடையாறு, வெங்கட்ரத்தினம் நகர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய்க்கு புதிய மூடி அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.