தியாகதுருகம் ஒன்றியம் சித்தாத்தூரில் புதிதாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா காணப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் அருகில் உள்ள சமூதாய கூடத்தில் கல்வி பயின்று வருவதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பள்ளி கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.