சென்னை வடபழனி, லட்சுமிபுரம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், வயதானோர் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோரை துரத்திக்கொண்டு செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமா?