புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் அருகே உள்ள பல்லவன் குளத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இந்த குளத்தில் பக்தர்கள் பூஜைகள் செய்து வழக்கம். தற்போது ஆடிமாதம் நடைபெற்று வருவதால் ஆடிபெருக்கு விழா வருவதற்குள் இந்த குளத்தை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.