சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஆண்டிப்பட்டியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்க வருகிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.