ஆபத்தான பள்ளம்

Update: 2023-06-28 17:34 GMT

திருக்கனூர் கடைவீதி, வணிகர் வீதி சந்திப்பில் கழிவு நீர் கால்வாயின் மேல் இரும்பு கம்மியால் ஆன சிலாப் போடப்பட்டுள்ளது. தற்போது சிலாப்கள் பழுதடைந்து உள்வாங்கியதால் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை சீர் செய்திட அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருக்கனூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், 'புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு' என வாசகங்கள் எழுதிய பேனரை வைத்துள்ளனர். இனியாவது சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்