பள்ளி வளாகத்தில் கட்டப்படும் கால்நடைகள்

Update: 2023-06-07 10:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி ஊராட்சியை சேர்ந்த அம்மானிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1977-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லததால் பள்ளியின் அருகே உள்ளவர்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்திற்குள் பராமரிக்கிறார்கள். மேலும் வளாகத்திற்குள் வைக்கும் செடிகளையும் கால்நடைகளை விட்டு அடியோடு அழித்து விடுகிறார்கள். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்