குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-05-24 14:09 GMT

கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் செல்வது இல்லை. சில குளங்கள் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களால் பரப்பளவு குறுகி குளம் எங்கே என தேடும் நிலையில் உள்ளன. குறிப்பாக கறம்பக்குடி தென்னகர் பகுதியில் உள்ள பறையன்குளம் ஆக்கிரமிப்பால் காணாமல் போய் உள்ளது. எனவே கறம்பக்குடி மக்களின் நீர் ஆதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பேரூராட்சி குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்