கியாஸ் குடோன் அகற்றப்படுமா?

Update: 2023-05-21 11:55 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மேலபாகனூர் குடித்தெரு மயான எரிமேடை அருகே தனியாருக்கு சொந்தமான எரிவாயு கியாஸ் குடோன் உள்ளது. இந்த குடோனிலிருந்து பகல் மற்றும் மாலை நேரங்களில் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயான எரி மேடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் போது அங்கிருந்து நெருப்பு துகள்கள் பறந்து சென்று குடோன் முன்பு அடுக்கி வைக்கப்பட்டுள்ள கியாஸ் சிலிண்டர்கள் மீது பட்டு அதனால் சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதை தவிர்க்க அப்பகுதியில் இயங்கும் தனியார் கியாஸ் குடோனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அந்த குடோனை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஊரவ வளர்ச்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை மேலபாகனூர் குடித்தெரு மயான மேடை அருகே உள்ள கியாஸ் குடோனை அங்கிருந்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதற்கு உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்