ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரிக்கை

Update: 2023-03-29 14:50 GMT
திருச்சி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட திம்மராய சமுத்திரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்த வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஒராண்டிற்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்