ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் நடைபாதைகள் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இதன் காரணமாக நடைபாதையில் செல்வதையே அவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். எனவே கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், பூங்காவில் உள்ள நபைடாதைகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.