தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2023-02-26 11:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி பழைய கடை வீதி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க வருவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கோழி, ஆடுகளை கடித்து குதறுகின்றன. கடந்த 20-ந் தேதி மட்டும் இப்பகுதியில் 3 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்