குரங்குகள் அட்டகாசம்

Update: 2023-02-26 11:24 GMT

தஞ்சை சீனிவாசபுரம், ரெட்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டமாக அங்கும்,இங்கும் ஓடி செல்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இவற்றால் பொதுமக்கள்,குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்