நடைபாதைகள் சேதம்

Update: 2023-02-19 09:19 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த நடைபாதைகளில் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்படுகிறார்கள். அடுத்த 2 மாதத்தில் கோடை சீசன் தொடங்க இருப்பதால் அந்த வழியாக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நடந்து செல்வார்கள். எனவே உடனடியாக நடைபாதைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்