இட வசதி வேண்டும்

Update: 2023-02-15 14:45 GMT


தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சோழபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்கள் மருந்து வாங்கும் இடத்தில் போதிய அளவில் இட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் படுக்கை அறை இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நோயாளிகளுக்கு போதுமான இட வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழபுரம், ஜெய்கணேஷ்.

மேலும் செய்திகள்