ஊட்டி அருகே டி.மணியட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறத. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். மேலும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.