ஊட்டியை அடுத்த மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் சாலையோர வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசியெறியப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த பிளாஸ்டிக் பொருட்களை தின்னும் வனவிலங்குகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.