செயல்படாத குடிநீர் எந்திரம்

Update: 2023-01-29 13:18 GMT

ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையோரத்தில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரம் உள்ளது. இந்த எந்திரம், கடந்த சில நாட்களாக பழுதடைந்து செயல்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட்ட நிலையில், எந்திரங்களும் செயல்படாமல் கிடப்பதால், குடிநீருக்காக அலையும் நிலை உள்ளது. எனவே அந்த எந்திரம் மீண்டும் செயல்பட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்