பட்டுப்போன மரம்

Update: 2023-01-29 11:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியை சேர்ந்த பிரசித்தி பெற்ற கோட்டைத்தலமான பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லுகின்றனர். இந்தக்கோவிலின் வாசலில் பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக தான் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆகவே ஏதேனும் விபரீத விபத்து ஏற்படுவதற்கு முன்பாக இந்த மரத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்