தெருநாய்களால் அச்சம்

Update: 2023-01-25 17:29 GMT

கிருஷ்ணகிரி நகர பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்