சந்துகடைகளில் மதுவிற்பனை தடுக்கப்படுமா?

Update: 2023-01-25 17:28 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்ன மட்டாரப்பள்ளி ஊராட்சி பசவன்ன கோவில் பகுதியில் சந்துகடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த மது விற்பனையால் அப்பகுதியில் உள்ள இளைஞர்களும், தொழிலாளர்களும் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு சாலைகளில் செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்