பெண்கள் அவதி

Update: 2023-01-25 12:44 GMT

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் பொழுதுபோக்குக்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவறை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பூங்காவிற்கு வரும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்