அறிவிப்பு பலகை வைக்கலாமே!

Update: 2023-01-22 14:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் கட்டண தகவல் குறித்த அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தாங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சேவை மையம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது. எனவே இ-சேவை மையங்களில் கட்டண தகவல் பலகை வைத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்