மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலம் எதிரே உள்ளது. இந்த தரிசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை