குரங்குகள் தொல்லை

Update: 2023-01-04 12:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், காரமங்களம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொங்கன் தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்