கடற்கரையில் குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள்

Update: 2023-01-01 15:01 GMT
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் கோடி கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை மணலில் அமர்ந்து இரவு நேரத்தில் ஏராளமானோர் மதுஅருந்தி வருகின்றனர். பின்னர் மதுபாட்டில்களை கடற்கரை மணலில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரையில் மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பதால் இது கடற்கரையா? அல்லது மதுபான கடையா? என்று நினைக்க தோன்றுகிறது. கடற்கரையில் அமர்ந்து மதுகுடிப்பதை தடுக்க இரவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.

மேலும் செய்திகள்