சாலை பணிகளால் வீடுகளுக்குள் புகும் தண்ணீர்

Update: 2022-07-18 16:03 GMT
பெங்களூரு கோரமங்களா 4-வது பிளாக் 60 அடி ரோட்டில் மாநகராட்சி சார்பில் சாலை விரிவாக்க பணி, நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கஷ்டத்தை புரிந்து கொண்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்