மதுரை 33-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் ரேஷன் கடை இல்லை. ஏற்கனவே கட்டப்பட்ட ரேஷன் கடையும் 10வருடங்களாக திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே விரைவில் ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.