நடுரோட்டில் அடுத்தடுத்து மின்கம்பங்கள்

Update: 2022-07-18 05:02 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகரில் உள்ள தனலட்சுமி நகர் சாலையில் அடுத்தடுத்துள்ள 3 மின்கம்பங்கள் நடுரோட்டிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நடுரோட்டில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றிவிட்டு, தெருவோரம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்