நாய்கள் தொல்லை

Update: 2022-12-07 14:35 GMT


மயிலாடுதுறை ரெயிலடி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப்பகுதியில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்