ஆபத்தான பயணியர் நிழற்குடை

Update: 2022-11-30 14:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணி செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான் ஊரணி விளக்கு சாலையில் கட்டப்பட்டிருக்கும் பயணியர் நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் சுவர்களின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் காணப்படுகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த நிழற்குடையால் பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்