காத்திருப்போர் அறை அமைக்கப்படுமா?

Update: 2022-11-30 14:07 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அமருவதற்கான காத்திருப்போர் அறை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் அருகில் உள்ள மரத்தடிகளிலும், கட்டிட வளாகங்களிலும் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காத்திருப்போர் அறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்