மதுரை குருத்தூர் அருகே பாரதிநகரில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீரானது நிறம் மாறி வருகிறது. இந்த நீரை பயன்படுத்தும் இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு நோய்களால் சிரமப்படுகிறார்கள். மேலும் இப்பகுதி குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி நிலத்தடி நீரை ஆய்வுக்கு உ ட்படுத்தி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.