ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-30 11:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குண்ணன்டார் கோவில் சரகம், குளத்தூர் தாலுகா மூட்டாம்பட்டி ஊராட்சியில் உள்ள சம்பா குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்