ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-30 11:44 GMT

அரியலூர் சித்தேரிக்கு சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் வரும் வகையில் வரத்துவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த வரத்து வாரிகளில் ஆகயத்தாமரைகள் அதிக அளவில் முளைத்துள்ளதால், மழை பெய்யும் போது மழைநீர் ஏரிக்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வரத்து வாரியில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்