அய்யப்ப பக்தர்கள் சிரமம்

Update: 2022-11-27 12:00 GMT

அரியலூர் டவுன் தெற்கு பகுதியில் வசிக்கும் அய்யப்ப பக்தர்கள் இப்பகுதியில் அமைந்துள்ள ஒப்பிலாத அம்மன் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளாக மாலை அணிந்து கொண்டு, பாத பூஜைகள் செய்து இரவு தங்குவதற்கான வசதிகள் அனைத்தையும் பக்தர்கள் தங்களின் சொந்த செலவில் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கோவில் பூட்டப்பட்டு இறைவழிபாடு செய்ய அனுமதி தர மறுக்கப்படுகிறது. இதனால் அய்யப்ப பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்