அறிவிப்பு பலகை தேவை

Update: 2022-11-23 15:39 GMT

சுசீந்திரத்தில் பழையாற்றின் குறுக்கே பழைய பாலம் மற்றும் புதிய பாலம் என 2 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலங்களும் ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பாக அந்த பாலம் பகுதியில் எந்த அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இருபாலம் பகுதியிலும் அறிவிப்பு பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும்.

-பெ.தங்கத்துரை, வழுக்கம்பாறை.

மேலும் செய்திகள்