குரங்குகள் தொல்லை

Update: 2022-11-23 09:08 GMT

ஊட்டி மைசூரு பேலஸ், மார்டன் பீஸ்டிங், பெர்ன்ஹில் ஆகிய பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. திறந்திருக்கும் ஜன்னல் வழியாக வீடுகளுக்கு புகுந்து உணவு பொருட்களை சூறையாடுவது, பொருட்களை உடைப்பது, கட்டிடங்களின் மேல் உள்ள தொட்டிகளை திறந்து தண்ணீரை அசுத்தப்படுத்துவது, ஆங்காங்கே இயற்கை உபாதைகளை கழிப்பது போன்ற தொல்லைகளை கொடுக்கின்றன. மேலும் துரத்த முயல்பவர்களை தாக்க முயற்சிக்கின்றன. எனவே அந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்