தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-20 12:57 GMT
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி ஊராட்சி 1-வது வார்டு காலனி தெருவில் ஏரானமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு பல ஆண்டுகளாக வடிகால் வசதி இல்லாமல் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் தவளை, விஷபூச்சிகள், பாம்புகள் தினமும் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்