குளத்தின் சுற்று சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-17 10:54 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் காசாங்குளம் மேல்கரையில் பெருமாள் கோவில் அருகே சுற்று சுவருடன் கூடிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த குளத்தின் சுற்றுசுவர் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் சுற்று சுவர் குளத்தில் சரிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தின் சுற்று சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகள்