மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்க்கரை பகுதியில் சுமார் 2ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த பகுதியில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.