உடைந்து கிடக்கும் அறிவிப்பு பலகைகள்

Update: 2022-11-13 10:17 GMT

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவைக்கு வரும் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளை அறிவிக்கும் அறிவிப்பு பலகைகள் பல இடங்களில் சேதம் அடைந்து கிடக்கின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், சாலை வளைவுகளை கணிக்க முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே உடைந்து கிடக்கும் அறிவிப்பு பலகைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்