திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பிராம்பட்டி தெற்கு, வ.கைகாட்டியில் உள்ள அலாந்தி குளம் தற்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் நடவுபணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைநீரை சேகரிக்கப்பட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.