குழந்தைகள் அச்சம்

Update: 2022-10-16 17:45 GMT

மதுரை மாவட்டம் அண்ணா நகர் நியூ.எச்.ஐ.ஜி. காலனியில் தெரு நாய்கள்  அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் இந்தப்பகுதியில் நடமாட பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்