தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-16 14:00 GMT

கோவை டாடாபாத் அழகப்ப செட்டியார் வீதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஏராளம். இங்கு தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்க முயல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்