மாணவ-மாணவிகள் அவதி

Update: 2022-10-12 13:45 GMT
மாணவ-மாணவிகள் அவதி
  • whatsapp icon

திருச்சி மாவட்டம், சண்முகா நகர் 2-வது குறுக்குத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் பகலில் தெருவில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளை துரத்தி சென்று கடித்து வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்துகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்