அரியலூர் செட்டி ஏரி கரை மற்றும் சந்தை பகுதி சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகளால் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் நடந்து செல்லவும் பொதுமக்கள், முதியவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை சாலைகளில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.