மதுபான கடை வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

Update: 2022-10-02 16:19 GMT
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள மதுபான கடையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். இந்த மதுபான கடையில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 200 மீட்டர் தூரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காளியம்மன் கோவிலும், சுமார் 400 மீட்டர் தூரத்தில் விஸ்வநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு மதுபான கடை அமைந்துள்ளதால் அனைத்து நேரமும் அப்பகுதி மது பிரியர்கள் கூட்டத்தால் பரபரப்பாகவே உள்ளது. இந்த பகுதியை பள்ளி மாணவ- மாணவிகள் கடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் அருகில் மதுபான கடை அமைந்துள்ளதால் கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் இதனால் பாதிப்படைகின்றனர். எனவே சுத்தமல்லி பிரிவு சாலையில் அமைந்துள்ள மதுபான கடையை வேறு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்